
டெல்லி சட்டசபை தேர்தல் நடப்பாண்டில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 29 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். இதற்கான முதல் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அதில் புதுடெல்லி தொகுதியில் முன்னாள் முதல் மந்திரியான கெஜ்ரிவாலுக்கு எதிராக முன்னாள் எம்.பி பர்வேஷ் வர்மாவை அக்கட்சி நிறுத்தி உள்ளது. அதேபோன்று கல்காஜி தொகுதியில் முதல் மந்திரி அதிஷிக்கு எதிராக முன்னால் எம் பி ரமேஷ் பிதூரியை பாஜக நிறுத்தியுள்ளது. இந்நிலையில் பிதூரி அரசியல் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, பீகாரில் லாலு பிரசாத், ஹேமா மாலினியின் மென்மையான கன்னங்களைப் போன்று சாலைகளை அமைப்பேன் என்று கூறினார்.
அவர் பொய் சொல்கின்றார், அதனை அவரால் செய்ய முடியவில்லை. ஆனால் நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். ஓக்ளா மற்றும் சங்கம் விகார் பகுதியில் நாங்கள் சாலைகளை மேம்படுத்தியது போல கல்காஜியில் உள்ள அனைத்து சாலைகளையும் பிரியங்கா காந்தியின் மென்மையான கன்னங்களைப் போன்று அமைப்பேன் என்று உறுதியாக கூறுகிறேன் என்று சர்ச்சையாக பேசினார். இதற்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் உறுப்பினரான சுப்ரியா ஸ்ரீநாத் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, இது மிகவும் வெட்கக்கேடானது, பெண்களுக்கு எதிரான மனப்பான்மையை பாஜக ஊக்குவிக்கிறது என்றார். பிரியங்கா காந்தியை பற்றி அவர் கூறியது, பெண்களைப் பற்றி அவருடைய மனநிலையை காட்டுகிறது. இதுவே பாஜகவின் உண்மையான முகம் என்று சாடினார்.