அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கூட்டணிக்கிடையே விரிசல் ஏற்பட்டது. பாரதிய ஜனதாவோடு இனி கூட்டணியில்லை என்று அதிமுக அறிவித்த நிலையில்,  இது தொடர்பாக பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கூட்டணி தொடர்பாக தகவலை இன்று பாரதிய ஜனதா கட்சி வெளியீடு என்று எதிர்பார்த்த நிலையில், கூட்டணி குறித்து டெல்லி தான் முடிவெடுக்கும் என்று மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார்.

கூட்டணியில் இருந்து செல்பவர்கள் செல்லட்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார். தன்னுடைய கருத்தை தேசிய தலைமையிடம் ஆழமாக கூறிவிட்டதாகவும்,  கூட்டணி குறித்து இனி அவர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் என்றும் அண்ணாமலை கூறி இருக்கிறார்.

கூட்டணியில் இருந்து செல்பவர்கள் செல்லட்டும். அது அவர்களின் விருப்பம். அதைப்பற்றி நாம் ஏன் பேச வேண்டும் என்றும் பாரதிய ஜனதா கட்சியினுடைய மாநில தலைவர் அண்ணாமலை கூறி இருக்கிறார்.

தன்னுடைய என் மண்,  என் மக்கள் நடைபயண நிறைவு நாளில் சென்னையில் நடைபெறும் பொதுக் கூட்டத்திற்கு பிரதமர் மோடி வருகை தர இருப்பதாகவும், அந்த பொதுக்கூட்டத்திற்கு 10 லட்சம் தொண்டர்களை திரட்ட வேண்டும் என்றும் நிர்வாகிகளிடையே அண்ணாமலை பேசி இருக்கிறார்.