
சமூக ஊடகங்களில் தற்போது ஒரு வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு மலைப்பகுதியில் இருந்து பெரிய கற்கள் உருண்டு கீழே விழும் காட்சியும், அருகில் சென்ற கார்கள் தப்பிக்க முயற்சிக்கும் பரபரப்பும் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளில், ஒரு கார் முற்றிலும் கற்களால் நசுக்கப்படும் விதமாக பாதிக்கப்பட்டது. அதில், ஒரு பெண் உட்பட மூன்று பேர் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் அந்த நேரத்தில் காரிலிருந்து வெளியே வந்ததால் பெரும் பேரிலிருந்து தப்பினர்.
हिमाचल प्रदेश : सिरमौर जिले में शिलाई गांव के पास लैंडस्लाइड, कार सवारों ने कूदकर और भागकर जान बचाई !! pic.twitter.com/mJUS8S4X8X
— Sachin Gupta (@SachinGuptaUP) May 30, 2025
இந்த சம்பவம் NH-707 என்ற தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்துள்ளது. நிலச்சரிவால், அந்தப் பகுதியில் பெரிய அளவில் குப்பைகள் குவிந்து, போக்குவரத்துக்கு மிகுந்த இடையூறு ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும், தேசிய நெடுஞ்சாலை பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள், பாதிக்கப்பட்ட இடத்தை சுத்தம் செய்து, போக்குவரத்தை மீண்டும் இயல்புக்கு கொண்டு வர முயற்சிக்கின்றனர்.
உள்ளூர் மக்கள் கூறுவதாவது, இந்த நெடுஞ்சாலையில் விரிவாக்கப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், நிலச்சரிவு அடிக்கடி ஏற்படுகிறது என்றும், மழைக்காலத்தில் இது மிகவும் ஆபத்தானதாக மாறுவதாகவும் தெரிவித்தனர். தற்போது, இந்த வீடியோ இணையத்தில் நூற்றுக்கணக்கான பார்வைகளையும் கருத்துகளையும் பெற்று வருகிறது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, மலைப்பாதைகளில் பயணிக்கும் மக்களுக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்பட வேண்டும் என்ற வலியுறுத்தலும் எழுந்துள்ளது.