ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெள்ளோடு அருகே குமரன் நகரில் கூலி வேலை பார்க்கும் ரவீந்திரநாத் என்பவர் வசித்து வந்துள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட ரவீந்திரநாத் கடந்த 2 ஆண்டுகளாக நீலாம்பூரில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்து சில நாட்களுக்கு முன்பு ரவீந்திரநாத் தனது வீட்டிற்கு சென்றார். சம்பவம் நடைபெற்ற அன்று மனைவி ஸ்ரீகுமாரி வெளியே சென்ற நேரம் ரவீந்திரநாத் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த ஸ்ரீகுமரி தனது கணவர் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து கதறி அழுதார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று ரவீந்திரநாத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.