சென்னை மாநகராட்சி பள்ளியில் பல்வேறு மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்கள் விளையாட்டில் சிறந்து விளங்கும் வகையில் குத்துச்சண்டை, கராத்தே, ஜூடோ, தேக்வாண்டோ, கேரம், அத்லடிக் போன்ற விளையாட்டுகளில் பயிற்சி அளிக்க மாநகராட்சி பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 6 மாநகராட்சி பள்ளிகளில் பயிற்சிகள் தொடங்கியுள்ளன.

பெரம்பூர் குக்ஸ் ரோட்டில் உள்ள மாநகராட்சி பள்ளியில் மேயர் பிரியா அவர்கள் முதல் கட்டமாக இதனை தொடங்கி வைத்துள்ளார். அவர் அப்போது கூறுகையில் மாணவர்களுக்கு வாரத்தின் 2 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும் எனவும் அவர்களை பல்வேறு போட்டிகளின் பங்கெடுக்கச் செய்து வெற்றி பெற வைப்பது தான் இதன் இலக்கு எனவும் தெரிவித்தார். பின்பு ஒவ்வொரு தொகுதியிலும் தலா ஒரு பள்ளிகளுக்கு கராத்தே பயிற்சி வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.