டைரக்டர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா, பாக்யராஜ், விடிவி கணேஷ் ஆகிய நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியுள்ள படம் “டாடா”. நாயகன் கவின் மற்றும் நாயகி அபர்ணா இரண்டு பேரும் கல்லூரி காலத்தில் இருந்தே காதலிக்கின்றனர். இதையடுத்து இருவருக்குள்ளும் நெருக்கம் ஏற்பட அபர்ணா கர்ப்பமாகிறார். அதன்பின் பெற்றோர்கள் வீட்டைவிட்டு இருவரையும் வெளியேற்றி விடுவதால் தனியாக ஒரு வீடு எடுத்து தங்கி வருகின்றனர்.

குடும்பம் வறுமைக்கு வரும் நிலையில், குடிக்க ஆரம்பித்து விடுகிறார் கவின். இதன் காரணமாக கவினுக்கும் அபர்ணாவிற்கு பிரச்சனை ஏற்படும். பின் வீட்டை விட்டு வெளியில் சென்ற கவின் தன் செல்போனை அணைத்து வைத்து விடுகிறார். அதே நேரம் அபர்ணாவிற்கு பிரசவ வலி ஏற்படுகிறது. அக்கம் பக்கத்தினர் அபர்ணாவை மருத்துவமனையில் சேர்க்கின்றனர்.

அப்போது அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறக்கிறது. ஆனால் குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டு சென்றுவிடுகிறார் அபர்ணா. அதனை தொடர்ந்து கைகுழந்தையோடு செய்வதறியாது நிற்கிறார் கவின். அதோடு அபர்ணாவை தேடி அலைகிறார் கவின். இறுதியில் அபர்ணா கிடைத்தாரா? கவின் அபர்ணா இணைந்தார்களா என்பதே படத்தின் மீதிக் கதை ஆகும். எமோஷனல், காதல், காமெடி என அனைத்தும் கலந்த கலவையாக வந்து ரசிகர்களை கவரும் விதமாக டாடா அமைந்திருக்கிறது.