
உலகிலேயே அதிக இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இன்னும் சில வருடங்களில் உருவெடுக்கும் என்று கூறப்படுகிறது. பியூ ஆராய்ச்சி மையத்தின் புதிய மக்கள் தொகை கணிப்பு தரவுகளின் படி, இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியா, முஸ்லிம் மற்றும் இந்து மதத்திற்கு வீடாக அமையும். இதில் பாகிஸ்தானில் 2வது பெரிய முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட நாடாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து இந்தோனேஷியா 257 பில்லியன் முஸ்லிம்களுடன் 3ம் இடத்தை பிடித்துள்ளது.
இந்த அறிக்கையின்படி, வருகிற 2050 ஆம் ஆண்டு இந்தியாவில் மொத்தம் 310 பில்லியன் முஸ்லிம்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மக்கள் தொகையில் 11% ஆகும். இதற்கு காரணம் முஸ்லிம்கள் பெரும்பாலும் இளம் வயது மற்றும் அதிக கருவுறுதல் என்று தெரிவித்துள்ளது. கடந்த 2019 ஆண்டு மொத்த மக்கள் தொகையில் 14.4 சதவீதம் முஸ்லீம்கள் இருந்தார்கள். இது 2050 ஆம் ஆண்டில் 18.4 சதவீதமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்தோனேசியா உலகிலேயே அதிக முஸ்லிம் மக்கள்களை கொண்டுள்ளது. இருப்பினும் வருகிற 2050 ஆம் ஆண்டில் இந்தியா 310 பில்லியன் முஸ்லிம்களுடன் இந்தியா இந்தோனேசியாவை விஞ்சும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.