மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள உயர் நீதிமன்றத்தில் பி.வி. நாகரத்தினா  மற்றும் என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று வேலையை சரியாக செய்யவில்லை என கூறி இரண்டு பெண் நீதித்துறை அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் பேசிய நீதிபதிகள், நீதித்துறை அதிகாரிகளின் கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம் குறித்து பேசினர். இதில் அவர்கள் கூறியதாவது, நீதித்துறையில் பணிபுரிபவர்கள் பேஸ்புக் போன்ற இணையதளத்தை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

திர்ப்புகள்  குறித்து பொதுவெளியில் கருத்து தெரிவிப்பது கூடாது. ஏனெனில் தீர்ப்புகள் வழங்கப்பட்டால், நீதிபதி இந்த தீர்ப்பை மறைமுகமாக ஏற்கனவே கூறிவிட்டார் என செய்திகள் வெளியாகும். நீதித்துறையில் பணிபுரிபவர்கள் ஒரு துறவியைப் போல வாழ வேண்டும். குதிரையைப் போல தீவிரமாக வேலை செய்ய வேண்டும். சமூக வலைதளம் என்பது ஒரு திறந்த தளமாகும் அதற்கு அடிமையாகாமல் நீதித்துறை அதிகாரிகள் தியாக உணர்வோடு செயல்பட வேண்டும் என கூறினர்.