
சவுதி அரேபியாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு பத்திரிக்கையாளர் அல் ஜாசர் என்பவர் தனது இணையதள பக்கங்களில் சவுதி அரச குடும்பத்தை சேர்ந்தவர்களின் மீதான ஊழல் வழக்கு குற்றச்சாட்டுகளை பதிவு செய்து வந்துள்ளார்.
அதனால் தேசதுரோக வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து கம்ப்யூட்டர், செல்போன் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், தற்போது சுமார் 7 ஆண்டுகளுக்குப் பின்னர் அல்ஜாசருக்கு நீதிமன்றம் மரண தண்டனை தீர்ப்பை நிறைவேற்றியது.
இந்நிலையில் நியூயார்க்கில் உள்ள பத்திரிக்கையாளர் பாதுகாப்பு கமிட்டி அதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கமிட்டியின் தலைவர் சார்லஸ் மார்ட்டினேஸ் கூறியதாவது, “பத்திரிக்கையாளர் ஜமால் கசோகி கடந்த 2018 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட சம்பவத்திற்கு சர்வதேச சமுதாயம் நீதி வழங்கத் தவறியது. இதனை அடுத்து இளவரசர் முகமது பின் சல்மான் பத்திரிக்கையாளர்கள் மீது அடக்கு முறையை தொடர்ந்து வருகிறார்”என குற்றம் சாட்டியுள்ளார்.