
டெல்லியில் காற்று மாசுபாடு ஏற்படுவது அதிகரித்து வருகிறது. இதனால் தற்போது டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதாவது பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பட்டாசு உற்பத்தி, சேமிப்பு, விற்பனை மற்றும் பயன்பாடு மீதான தடை ஜனவரி 1, 2025 வரை அமலில் இருக்கும். பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கான தடையை கடுமையாக அமல்படுத்தபட்டு கண்காணிக்கப்படும் என்று டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது.
டெல்லி மாசு கட்டுப்பாட்டு குழு மற்றும் வருவாய் துறையுடன் இணைந்து செயல் திட்டம் தயாரிக்கப்படும், மேலும் இது மாசுபாட்டை கட்டுப்படுத்த டெல்லி அரசின் குளிர்கால செயல்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.