கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் நேற்று பாஜகவில் இருந்து விலகிய நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவருக்கு காங்கிரஸ் கட்சியில் பொறுப்புகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது என மாநில தலைவர் கூறினார். இந்நிலையில் தற்போது ஜெகதீஷ் செட்டருக்கு காங்கிரஸ் சார்பில் ஹூப்ளி தார்வாட் மத்திய தொகுதியில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய பி ஃபார்ம் ஐ கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவகுமாரிடமிருந்து ஜெகதீஷ் ஷெட்டர் பெற்றுக் கொண்டுள்ளார். மேலும் சட்டமன்றத் தேர்தல் மே 10-ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், பாஜக கட்சியின் முக்கிய புள்ளி திடீரென காங்கிரஸ் கட்சியில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.