
இஸ்ரேல்- ஈரானுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. அதாவது அணு ஆயுத தயாரிப்பில் ஈரான் தீவிரமாக ஈடுபட்டு வருவதால் இஸ்ரேல் பாதுகாப்பு கருதி ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானும் இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. தொடர்ந்து 3ஆவது நாளாக இரு நாடுகளும் தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் இஸ்ரேல் பிரதமர் தனது மகனின் திருமணத்தை ஒத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது இன்று நெதன்யாகுவின் மகன் அவ்னர் நெதன்யாகூ தனது காதலியான அமித் யார்தேனியை திருமணம் செய்து கொள்ள இருந்தார்.
ஆனால் இஸ்ரேலின் பணயக்கைதிகள் இன்னும் காசாவில் உள்ள நிலையில் நெதன்யாகு குடும்பத்தினர் மட்டும் திருமண கொண்டாட்டத்தில் ஈடுபடுவது நியாயமா? என உள்நாட்டில் எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது. அதனால் சூழ்நிலை கருதி பிரதமர் நெதன்யாகூ தனது மகனின் திருமணத்தை ஒத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.