
சேலம் மாவட்டத்தில் உள்ள பனமரத்துப்பட்டியை அடுத்த நாழிக்கல்பட்டி கிராமத்தை சேர்ந்த நபர் ஜெயராமன்(78). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பூந்தோட்டத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன் சென்றுள்ளார். அப்போது அந்த பூந்தோட்டத்தில் ஒரு 7 வயது சிறுமியும் தனது பெற்றோருடன் சேர்ந்து பூக்கள் பறித்துக் கொண்டிருந்தார்.
இதனை கண்ட ஜெயராமன் அந்த சிறுமியுடன் பேச்சுவார்த்தை கொடுத்துக் கொண்டே அவரும் சேர்ந்து பூக்கள் பறித்து கொண்டிருந்தார். அதன் பின் சிறுமியின் பெற்றோர்கள் சிறுமியை பூந்தோட்டத்தில் விட்டுவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். அந்த சமயத்தில் ஜெயராமன் அந்த சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் செய்வது அறியாது பயந்த சிறுமி வீட்டிற்கு ஓடி சென்று தனது பெற்றோரிடம் தனக்கு நடந்த சம்பவத்தை கூறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஜெயராமனை பிடித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் அவர் மீது புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் முதியவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை ஜெயராமன் ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் ஜெயராமன் மீது வழக்குப்பதிவு செய்து சேலம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.