கன்னியாகுமரியில் உள்ள ஒரு தேவாலயத்தில் பணியாற்றி வருபவர் பாதிரியார் பெனிடிக் ஆண்டோ. இவர் பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சமீபகாலமாக பாதிரியாரின் காதல் லீலைகள் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோக்கள் வெளியானது. இதுகுறித்து விசாரிக்கையில் சம்பந்தப்பட்ட நபர் குமரியில் உள்ள தேவாலயத்தை சேர்ந்த பாதிரியார் என்பது தெரிய வந்தது. இவர் தேவாலயத்திற்கு வரும் பல பெண்களுடன் நெருங்கி பழகி நெருக்கமாக இருக்கும் வீடியோக்களை தன்னுடைய செல்போனில் எடுத்து வைத்துள்ளார்.

அந்த வீடியோக்களை வைத்து பெண்களை பாதிரியார் மிரட்டியும் உள்ளார். இந்நிலையில் பேச்சி பாறை பகுதியைச் சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி ஒருவர் பாதிரியார் பெனிடிக் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்தது தெரிந்து பாதிரியார் தலைமறைவாகி விட்டார். பாதிரியாரை பிடிப்பதற்காக தற்போது குமரி போலீசார் பெங்களூரு விரைந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.