
உலகளவில் 63 நாடுகளில் குரங்கம்மை நோயின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. நமது நாட்டில் கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலத்தில் தல ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, ஆகிய விமான நிலையங்களில் குரங்கமை தொற்று உள்ள நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு தீவிர பரிசோதனை செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் கண்டறியவில்லை. அதோடு குரங்கம்மை அறிகுறியுடன் வருபவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை கொடுப்பதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அவர் எந்த நாட்டில் இருந்து வந்தார், தற்போது எங்கே இருக்கிறார் என்ற தகவலை ஒன்றிய அரசு ரகசியமாக வைத்துள்ளது. இதையடுத்து விமான நிலையங்களில் விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் டிஜிட்டல் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் குரங்கமை பாதிப்பு இருப்பதால் தமிழக-கேரளா எல்லையில் உள்ள 13 சோதனை சாவடிகளில் தீவிரமாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பெரியவர்கள், குழந்தைகள் முகம் மற்றும் முழங்கைக்கு கீழ் பகுதியில் புதிதாக கொப்புளங்கள் உள்ளதா என்று பரிசோதனைக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.