உத்திரபிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில் உள்ள பகுதியில் நவுரங் பகதூர் சிங்(62), அனுசியா சிங்(60) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று அவர்களது வீட்டில் உள்ள இன்வெர்ட்டர் பேட்டரி திடீரென வெடித்தது. இதில் நவுரங் பகதூர் சிங் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் அவரது மனைவி படுகாயம் அடைந்தார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சிங்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.