
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டையில் வசித்து வருபவர் முனிசாமி இவருடைய மனைவி காஞ்சனா.(57). இந்த தம்பதியருக்கு வரலட்சுமி என்ற மகள் உள்ளார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வரலட்சுமிக்கும் குமரேசன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. குமரேசனின் வயது 32. இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளன. குமரேசன் என்பவர் மொபைல் கடை வைத்துள்ளார். மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான குமரேசனுக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று வழக்கம் போல மது குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்து கொண்டிருந்தார். அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த காஞ்சனா தனது மருமகனை தடுக்க முயன்றுள்ளார். இதில் கோவம் அடைந்த குமரேசன் தனது மாமியார் என்று கூட பாராமல் காஞ்சனாவை மண்வெட்டியால் தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் காஞ்சனா உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குமரேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.