
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் முருகானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 12 ஆம் வகுப்பு படித்து வந்த சரிகா என்ற 17 வயது மகள் இருந்துள்ளார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக ஒரு 21 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் இருவரும் செல்போனில் பேசி பழகினர். இதனால் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது.
இந்நிலையில் அந்த வாலிபர் திடீரென மாணவியுடன் பேசுவதை கடந்த சில நாட்களாக தவிர்த்து வந்துள்ளார். இதனால் அந்த மாணவி மன உளைச்சொல்லில் இருந்த நிலையில் திடீரென காதலிக்க மறுப்பு தெரிவித்து வாலிபர் மெசேஜ் அனுப்பியுள்ளார். இது மாணவிக்கு வேதனையை ஏற்படுத்திய நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது சம்பவ நாளில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் காதல் தோல்வியால் மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.