
இலங்கை நாடாளுமன்றத்தில் வன்னி எம்பி துரைராசா ரவிகரன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, தமிழ்நாடு இழுவைப் படகுகள் இலங்கை எல்லைக்கு வருவதை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் இலங்கை மீனவர்கள் வீதியில் இறங்கி போராடுவார்கள்.
இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை சுரண்டும் வகையில் செயல்படும் இந்திய இழுவைப் படகுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.