ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய ஏ அணிக்கு எதிராக அந்நாட்டு ஏ அணி 2 போட்டிகள் விளையாடி வருகிறது. இந்த 2 அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள மெக்கே நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. முன்னதாக 4ம் நாள் ஆட்டத்தின் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய நடுவர் புதிய பந்தை அளித்திருந்தார். அது ஏன் என்று இந்திய வீரர்கள் கேள்வி கேட்டதற்கு பந்தை நீங்கள் சேதப்படுத்திவிட்டீர்கள், அதனால் அதை மாற்றி இருக்கிறோம். இது பற்றி பேச வேண்டிய அவசியமே இல்லை, நீங்கள் ஆட்டத்தை தொடருங்கள் என்றார்.

இந்த முடிவு முட்டாள்தனமானது என்று இஷான் கிஷன் சொன்னதற்கு அவர் மீது புகார் அளிக்க இருப்பதாக ஷான் கிரேக் எச்சரித்துள்ளார்.  இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிக்கை ஒன்றிய வெளியிட்டிருந்தது. அதில் கூறியிருந்ததாவது, நடுவர், இந்திய வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாக கூறியதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ளார். இந்நிலையில் அப்போட்டியில் கடைசி நாளில் ஆஸ்திரேலியாவின் பக்கம் வெற்றி இருந்ததாக முன்னாள் வீரர் இயன் ஹீலி மறைமுகமாக தெரிவித்துள்ளார். அப்போது பந்தை சேதப்படுத்திய ஆஸ்திரேலிய அணியை இந்திய அணியினர் வீழ்த்த முயற்சித்ததாகவும் அவர் விமர்சித்தார். ஆனாலும் அதையும் தாண்டி ஆஸ்திரேலியா நேர்மையாக வென்றது என்று அவர் கூறினார்.