நவம்பர் 19ஆம் தேதி நடைபெற உள்ள உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான இறுதிப் போட்டி நடைபெறவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் துணிச்சலான கணிப்பு ஒன்றை IPL போட்டி நடைபெற்ற சமயத்தில் தெரிவித்திருந்தார்.அதன்படி,  ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்புக்கு 450 ரன்களை குவிக்கும் என்றும்,  அதே நேரத்தில் இந்திய அணி வெறும் 65 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகும் என, 

முன்னதாக கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடிய மார்ஷ் தனது  கணிப்பை தெரிவிக்க, அது  கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் விவாதங்களை  கிளப்பியது. மார்ஷின் கணிப்பு உண்மையாக மாறுமா ? என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் போட்டிக்காக காத்திருக்கிறார்கள், இது வரவிருக்கும் இறுதி மோதலுக்கு கூடுதல் உற்சாகத்தை சேர்த்துள்ளதாக ரசிகர்கள் தங்களது கருத்துக்களை இது குறித்து தெரிவித்து வருகின்றனர்.