கனடாவைச் சேர்ந்த காலேப் ப்ரைசன் (Caleb Friesen) என்பவர் கடந்த 2017-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தார். சுமார் 8 ஆண்டுகளாக பெங்களூருவில் வசித்து வரும் அவர், தனது அனுபவங்களைச் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

“வெளிநாட்டுப் பயணிகளும், இன்ஃப்ளூயன்சர்களும் இந்தியாவை ஒரு அழுக்கான நாடாகவே உலகுக்குக் காட்டி வருகிறார்கள்; ஆனால் அது உண்மையான இந்தியா அல்ல” என அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Caleb Friesen (@caleb_friesen)

இந்தியாவிற்கு வந்த பிறகு தான் இங்கிருக்கும் அபரிமிதமான வளர்ச்சி குறித்துத் தனக்குத் தெரிய வந்ததாக காலேப் கூறுகிறார். “இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் உணவு பற்றி மட்டுமே எனக்குத் தெரிந்திருந்தது.

ஆனால், இங்குள்ள தொழில்நுட்ப வளர்ச்சி (Tech Scene) மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் வேகம் என்னை மலைக்க வைத்துவிட்டது. இந்திய இளைஞர்கள் எத்தகைய புதுமைகளைச் செய்து வருகிறார்கள் என்பதை உலகம் இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை” என அவர் புகழ்ந்துள்ளார்.