
இந்தியா நேபாளத்திற்கு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆம்புலன்ஸ்களை நன்கொடையாக வழங்கி வருகிறது. கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் இதுவரை நேபாளத்திற்கு 1,049 ஆம்புலன்ஸ்கள் இந்தியா பரிசாக வழங்கியுள்ளது.
அதிலும் கடந்த 2022 ஆம் ஆண்டு நேபாள கல்வி நிறுவனங்களுக்கு 300 பள்ளிப் பேருந்துகளையும் இந்தியா பரிசாக வழங்கியுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு 40 ஆம்புலன்ஸ் வாகனங்களை இந்தியா நேபாளத்திற்கு வழங்கி உள்ளது.
அதனைக் கொண்டாடும் விதமாக காத்மண்டுவில் உள்ள இந்திய தூதரகம் உள்பட நான்கு இடங்களில் வாகன ஒப்படைப்பு நிகழ்ச்சி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
நேபாளத்தின் சுகாதாரத் துறை உள் கட்டமைப்பை வலுப்படுத்தும் விதமாக இந்தியா ஆம்புலன்ஸ்கலை பரிசாக அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.