இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கும் நிலையில் முதல் தொடரில் இந்தியா 280 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரில் இன்று தொடங்கிய நிலையில் திடீரென மழை பெய்தது.

மைதானத்தில் தண்ணீர் தேங்கியதால் தற்போது தொடரை கைவிடுவதாக அறிவித்துள்ளனர். வங்காளதேச அணி பேட்டிங் செய்து வரும் நிலையில் 35 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் அடித்திருந்து நிலையில் போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி கைவிடப்பட்டது. மேலும் நாளை இரண்டாவது நாள் ஆட்டம் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திடீரென போட்டி ரத்தானதால் ரசிகர்கள் வருத்தத்துடன் மைதானத்தை விட்டு சென்றனர்.