தற்போதைய காலகட்டத்தில் UPI பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் அதன் மூலம் ஏற்படும் மோசடிகளும் அதிகரித்துள்ளன. அதனை தடுக்கும் விதமாக ரிசர்வ் பேங்க் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றது. அந்த வகையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது மத்திய அரசு நேரடி வரிகள் வாரியத்தின் விதிப்படி ஒரு நிதியாண்டில் ஒரு நபர் ரூ 10 லட்சம் அல்லது அதற்கு மேல் பணம் டெபாசிட் செய்தால் வருமான வரி துறைக்கு தகவல் தெரிவிக்கப்படும். அதோடு அதிக பணம் டெபாசிட் செய்த நபரின் வீட்டிற்கு நேரடியாக வருமான வரித்துறை அலுவலகத்திலிருந்து நோட்டீஸ் அனுப்பப்படும் என்று அறிவித்துள்ளது. அத்தகைய பணம் எங்கிருந்து வந்தது என்பதற்கான சரியான காரணத்தை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.