நீலகிரி மாவட்டத்தில் உள்ள பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் 1ம் வகுப்பிலும், 6ம் வகுப்பிலும் பள்ளியில் சேர்க்கும் மாணவர்களுக்கு ரூ. 5000 அவர்களது கணக்கில் சேமிப்பாக வைக்கப்பட்டும் என்று அறிவித்தனர். இந்த முயற்சிகளை முன்னாள் மாணவர்கள் முன்னெடுத்து நடத்தி வருகின்றனர்.

கடந்த 1922ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பள்ளி நூற்றாண்டு காலமாக இயங்கி வருகிறது. இதன் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டுள்ளது. அப்போது முன்னாள் மாணவர்களின் முழு முயற்சியால் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க இந்த செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொரோனா காலகட்டத்தில் இந்த பள்ளி மூடப்பட்டது. அதன் பிறகு கடந்த 2022ம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்பொழுது மொத்தமாக 42 மாணவர்கள் படிக்கின்றனர். இந்நிலையில் மாணவர்களுக்கு வங்கிக் கணக்கில் ரூ.5000 செலுத்தப்படும் என மகிழ்ச்சியான செய்தி அறிவிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மகழ்ச்சி அடைந்ததுள்ளனர்.