உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் நிர்வாணமாக ஓடுவேன் என கூறிய நடிகை ரேகா போஜ், தனது கருத்துக்கு விளக்கம் அளித்துள்ளார். வெளிநாட்டு ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது ஆடைகளை களைந்து பீச்சில் ஓடுவார்கள். இந்தியா வெற்றி பெற்றால் நானும் அதையே செய்வேன். ஆனால் அனைவரின் முன்போ, கேமரா முன் போ செய்வேன் என்றோ சொல்லவில்லை. இந்திய பானியில் பட்டுப் புடவை கட்டிக்கொண்டு கையில் கொடியுடன் ஓடுவேன் என்றார்.