சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 2019 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற ஐசிசி தொடரை உருவாக்கியது. இதன் முதலாவது சீசனில் நியூசிலாந்து அணியும், இரண்டாவது சீசனில் ஆஸ்திரேலியா அணியும் வென்றது. இந்த 2 சீசன்களிலும் இந்திய அணி 2-ம் இடத்தை தான் பிடித்தது. இதையடுத்து தற்போது நடைபெற உள்ள 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியில் லண்டன் லார்ட்சில் இன்று நடைபெறுகிறது.

இதனால் கடந்த ஒரு வாரமாக இரு அணி வீரர்களும் கடுமையாக பயிற்சி செய்து வருகின்றனர். இந்த இரு அணிகளும் மோத உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இதற்கிடையில் இந்த போட்டி டிராவில் முடிந்தால் கோப்பை யாருக்கு என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டி டிராவில் முடிந்தாலோ அல்லது மழை காரணமாக பாதிக்கப்பட்டாலோ கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்த அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.