
குஜராத்தின் அகமதாபாத்திலிருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்குச் செல்ல திட்டமிடப்பட்ட விமானம், அகமதாபாத் விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பயணிகளும், 10 பணியாளர்களும் இருந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மீட்பு குழுவினர் அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக மொத்தம் 274 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியது.
இந்நிலையில் இந்த விமான விபத்து தொடர்பாக ஏர் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். அதாவது விமானத்தில் பல ஆண்டுகளாகவே பிரச்சனைகள் இருப்பதை பைலட் உட்பட விமான குழுவினர் நிறுவனத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்றும் அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை என்று கூறியுள்ளார். அந்த ஸ்கிரீன்ஷாட்டை ஷேர் செய்த அவர் இது உண்மை எனில் இனி நான் ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கவே மாட்டேன் என்று கூறியுள்ளார்.