விஷால் நடிப்பில் வெளியான சிவப்பதிகாரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மம்தா மோகன் தாஸ். இந்த திரைப்படத்தை தொடர்ந்து குரு என் ஆளு, தடையறக் காக்க உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து சினிமா உலகில் வலம் வந்து கொண்டிருந்த இவருக்கு திடீரென தொற்று நோய் பாதிப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் இது குறித்து தான் அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது, புற்றுநோய் பாதிப்பு இருப்பது குறித்து தெரிய வந்ததும் முதலில் எனது தோழிகளிடம் தான் கூறினேன். அவர்கள் எனக்கு நம்பிக்கை ஊட்டினார்கள். ஆனால் நோய் வந்ததும் பயந்து தனியறையில் இருட்டில் உட்கார்ந்து அழுதேன்.

எப்போதும் கேமரா முன் இருக்கும் நான் தனிமையை தாங்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டேன். ஒரு கட்டத்தில் இறந்து விடுவேனோ என பயந்தேன். யாராவது உடல் மீது இந்த மச்சங்கள் எப்படி என கேள்வி கேட்டால் முகத்தில் அடித்தபடி எனது இன்ஸ்டாவில் பார்த்துக் கொள்ளுங்கள் என கூறி விடுவேன் என அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.