சீனாவில் டிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் முன்னணி பல்கலைக்கழகங்கள் உட்பட பல பட்டங்களை பெற்றுள்ளார். பிரிட்டனின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பல்லுயிர் பெருக்கத்தில் முதுகலை பட்டம், Pcking பல்கலைக்கழகத்தில் ஆற்றல் பொறியியலில் முதுகலை பட்டம் மற்றும் சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

இவ்வளவு பட்டம் பெற்ற இவருக்கு பொருத்தமான வேலை கிடைக்கவில்லை. இவர் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப்படிப்பு ஆராய்ச்சியாளராகவும் வேலை பார்த்துள்ளார். மார்ச் மாதத்தில் அவரது ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் புதிய வேலை எதுவும் கிடைக்காததால் சிங்கப்பூரில் உணவு டெலிவரி ஊழியராக பணிபுரிந்துள்ளார்.

ஆக்ஸ்போர்டு பட்டதாரியான இவர் பல நிறுவனங்களுக்கு விண்ணப்பித்து தனது வேலைக்காக 10 நேர்காணல்களில் கலந்து கொண்டார். ஆனால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இவர் டெலிவரி ஊழியராக ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வேலை செய்து வாரத்திற்கு ரூபாய் 40 ஆயிரத்துக்கு மேல் சம்பாதிக்கிறார்.

நாம் கடினமாக உழைத்தால் நாம் ஒரு நல்ல வாழ்க்கையை சம்பாதிக்க முடியும். இது ஒரு மோசமான வேலை அல்ல என்று டிங் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.