இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், நடிகரும், பயிற்சியாளருமான யோக்ராஜ் சிங், சமீபத்தில் தனது முதல் மனைவியிடமும், மகனும் இந்திய அணியின் துல்லிய வீரருமான யுவராஜ் சிங்கிற்கும் உணர்ச்சிபூர்வமாக மன்னிப்பு கேட்டுள்ளார். “என் வாழ்நாளில் செய்த மிகப்பெரிய தவறுகளுக்காக நான் தலைகுனிந்து வருந்துகிறேன்.

என் உயிரே போயிருக்கும் தருணத்தில் தான் எனக்கு உண்மை புரிந்தது…” என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

‘Fivewood’ என்ற போட்காஸ்டில் பேசிய யோக்ராஜ், சில மாதங்களுக்கு முன்னர் அவருக்கு ஏற்பட்ட விபத்தில் உயிர் தப்பியது ஒரு அதிசயமாகவே இருந்ததாக கூறினார். “டாக்டர்கள் நான் உயிரோடு வரமாட்டேன் என்றார்கள். ஆனால் நான் மீண்டேன். அதனால் தான், என் பிழைகளை உணர்ந்தேன். யுவராஜ் சிங்கை இந்தியாவின் கிரிக்கெட் புரட்சியாளராக உருவாக்க நினைத்தேன்.

அதற்காக என் முதல் மனைவியின் மீது நிறைய கட்டுப்பாடுகள் விதித்தேன். இன்று அந்த தவறுகளை நினைத்துப் பயமாக இருக்கிறது…” என கூறினார். இதைத்தொடர்ந்து, “என்னை நேசித்தவனோ, வெறுத்தவனோ, யாரையும் விட்டுவைக்க மாட்டேன். என் குடும்பம், நண்பர்கள், எதிரிகள் என யாரையும் காயப்படுத்தி இருந்தால்… என் குழந்தைகள், யுவராஜின் தாயார்… அனைவருக்கும் என் உள்ளம் கனிந்த மன்னிப்பு.

என்னை மன்னியுங்கள். என் வாழ்க்கையில் நல்லது செய்ததாக ஒன்றுமில்லை. என் உள்ளம் பிழைகளால் நிரம்பி விட்டது,” என கூறிய யோக்ராஜ், தன்னை சீர்திருத்த முயற்சி எடுத்துள்ளதாகக் கூறினார். தற்போது தனது குடும்ப உறுப்பினர்கள் பெரும்பாலோரை விட்டுவிட்டு தனியாக வாழ்கிறார் என்று தெரிவித்த யோக்ராஜ், “நான் இனி யாரையும் தேட மாட்டேன்.

என் வாழ்வில் மகன், மகள் என்ற அடையாளமே கிடையாது. என் இரு மனைவிகளையும் ‘அம்மா’ என அழைக்கிறேன். என் குழந்தைகளை என் குருவின் வடிவமாக பார்க்கிறேன். நான் மரணிக்கும்போது என் குரு என்னைப் பார்த்து பெருமை கொள்வார் என நம்புகிறேன்,” என்றார்.