
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரக்யாக் ராஜ் நகரில் மகா கும்பமேளா ஜனவரி மாதம் 13ஆம் தேதி தொடங்கியது. 12 ஆண்டுகளுக்கு பின் இந்த விழா மிகப்பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. மகா கும்பமேளா பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி வரை நடைபெறும். இந்த விழாவில் இந்தியா மட்டுமல்லாது உலகம் அனைத்திலும் இருந்து பல கோடி மக்கள் பங்கேற்பார்கள். இதனை அடுத்து பிரயாக்ராஜ் நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த பிரயாக்ராஜ் மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் பிரதமர் நரேந்திர மோடி புனித நீராடியுள்ளார். அதன் பின் அவர் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டிருப்பதாவது, மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியதன் மூலம் தெய்வீகமான உணர்வைப் பெற்றேன். அங்கு சென்று புனித நீராடியதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். கோடிக்கணக்கான மக்களைப் போல் நானும் பக்தி உணர்வால் திளைத்தேன். அனைவருக்கும் கங்கைத்தாய் அமைதி, அறிவு, நல்ல ஆரோக்கியம், மற்றும் நல்லிணக்க உணர்வை கொடுக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் வெளியிட்டிருந்தார்.
Blessed to be at the Maha Kumbh in Prayagraj. The Snan at the Sangam is a moment of divine connection, and like the crores of others who have taken part in it, I was also filled with a spirit of devotion.
May Maa Ganga bless all with peace, wisdom, good health and harmony. pic.twitter.com/ImeWXGsmQ3
— Narendra Modi (@narendramodi) February 5, 2025