பாஜக தலைவர் அண்ணாமலை பதவியேற்ற பிறகு, நீண்ட நாள் கழித்து நடிகை குஷ்பு பேட்டி அளிக்க அவர்  அனுமதி வழங்கியுள்ளார். அதாவது பாஜகவின் மாநில தலைவராக அண்ணாமலை பதவி ஏற்றார். அதன் பிறகு மூத்த தலைவர்களை அவர் ஓரங்கட்ட ஆரம்பித்தார், இதனால் கட்சியிலிருந்து பலரும் விலகினர். நடிகை குஷ்பு  போன்றவர்கள் அமைதியாகிவிட்டனர். இந்நிலையில் கட்சியிலிருந்து தனக்கு எந்த அழைப்பும் வருவதில்லை என்று அவர் கூறி இருந்தார். அப்போது அண்ணாமலையும், நான் யாரையும் அழைப்பதில்லை, மாநில பொறுப்பாளர் கேசவ விநாயகம் தான் அழைப்பார் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பூ சென்னை தி நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பேட்டி அளித்திருந்தார்.

அப்போது அவர் கூறியதாவது, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவருக்கு 25 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கல்வியை இலவசமாக வழங்கி விட்டோம் என்பதால் எல்லா பிரச்சனையும் சரியாகிவிடாது. அந்த மாணவிக்கு ஏற்பட்ட பிரச்சனை அவர் சாகும் வரை மறக்க முடியாது, பெண்களுக்கு பாலியல் தொல்லை நடக்கும் போது கட்சி ரீதியாக போசக்கூடாது. இன்னைக்கு பாஜக அலுவலகத்தில் இருக்கிறோம், நான் பாஜக சார்பில் பேசவில்லை. ஒரு பெண் என்ற முறையில் பேசிக் கொண்டிருக்கிறேன். எனவே இதை அரசியல் ஆக்க வேண்டாம். அந்த மாணவி தைரியமாக வெளியே வந்து பேசுகிறார்.

அதை நான் பாராட்டுகிறேன், நிறைய பெண்கள் தனக்கு ஏற்பட்ட வன்கொடுமைகளை வெளியே வந்து பேச பயப்படுகின்றனர். அந்த மாணவி தொடர்பாக தகவலை வெளியே கூறியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். யார் கொடுத்தது? யார் கொடுக்க சொன்னது? அதைப்பற்றி யாரும் பேசவில்லை. எந்த மாநிலத்தில் பெண்களுக்கு பிரச்சனை நடக்கும் போதும் யாரும் அதை கேவலப்படுத்த வேண்டாம். ஒட்டுமொத்தமாக நமது நாட்டில் பாதுகாப்பு பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கா? என்பதை நாம் பார்க்க வேண்டும். நான் என்னைக்குமே கண்ணகி தான், புதுசு ஒண்ணுமே இல்லை. 38 வருடமாக கண்ணகி ஆகத்தான் வாழ்ந்து வருகிறேன். மனதில் பட்டதை பேசுவேன், மனதில் பட்டதை செய்வேன் அதில் எந்த மாற்றமும் கிடையாது என்று கூறினார்.