சென்னை விமான நிலையத்தில் தக் லைஃப் பட ப்ரமோஷன் நிகழ்ச்சிக்கு செல்வதற்காக வந்த நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, தக் லைஃப் படம் நன்றாக இருக்கும் என்பதால்தான் முன்னாடி விடுகிறோம். எங்களுக்கு நம்பிக்கை இருக்கு மக்களுக்கு மிகவும் பிடிக்கும். இப்போது கூட பிரமோஷன் வேலையாக தான் மலேசியா, துபாய் செல்ல உள்ளேன்.

மேலும் பேசிய அவர், நம்முடைய மக்கள் நீதி மய்யத்தின் குரல் மாநிலங்களவையில் நிச்சயம் ஒலிக்கும். அது ஒரு பாரபட்சமில்லாத தமிழர்களுக்கான குரலாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

அதன் பின் தமிழகத்தில் தோன்றியுள்ள புதிய கட்சிகள் குறித்து கேட்ட கேள்விக்கு, நானே புதிய கட்சிதான். புதிய கட்சிகளை குறித்து விமர்சிப்பது கூடாது என கூறிவிட்டு சென்றார்.