மதுரையில் இந்து முன்னணி அமைப்பு தலைமையில் இன்று முருகன் பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முறையாக செய்யப்பட்டிருக்கும் நிலையில் பொதுமக்கள் பலரும் வந்து கொண்டே இருக்கின்றனர்.

இந்த மாநாட்டில் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்தயனார் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குனர் அமீரும், பல அரசியல் தலைவர்களும் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

அதில் இயக்குனர் அமீர் பேசியதாவது, “முருகன் என்பவர் மக்களுக்கான கடவுள்… அவரை அரசியலுக்குள் கொண்டு வர வேண்டாம்” என்று கூறினார். இவர் பேசியது இணையத்தில் வைரலான நிலையில் பாஜக நிர்வாகியான பேரரசு அமீரின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பதில் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, “வேற்று மதத்தை சேர்ந்த நீங்கள் இந்து மதத்தை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லாதவர்கள். நீங்கள் இந்து மதத்தை சேர்ந்தவராக இருந்தால் இந்த கருத்தை தெரிவிப்பதில் எந்த ஒரு ஆட்சபனையும் இல்லை. ஆனால் நீங்கள் வேற்று மதம் என்பதால் இந்து மதத்திற்குள் தலையிட வேண்டாம்” என்று கூறியுள்ளார்.