
மத்திய துருக்கியில் உள்ள பரந்த நிலப்பரப்பு பழங்கால தேவாலயங்களால் சூழப்பட்டது. யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்ட கப்பாட்டோசியாவின் கூம்பு வடிவ பாறை அமைப்புகள் ஆகியவை முக்கிய சுற்றுலா தளங்களாக கருதப்படுகின்றன.
அந்தப் பகுதிகளில் வெப்ப காற்று பலூன் சவாரி பிரபலமான சுற்றுலா நடவடிக்கைகளில் ஒன்று. அதில் ஏறி அப்பகுதிகளை பறந்து கொண்டே பார்ப்பதை சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்புவர்.
இந்நிலையில் மத்திய துருக்கியில் உள்ள அக்சரய் மாகாணத்தில் வெப்ப காற்று பலூனில் சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர். அப்போது பலூன் பறந்து கொண்டிருக்கும்போதே திடீரென கட்டுப்பாட்டை இழந்து வேகமாக தரையில் மோதியுள்ளது.
அந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பின்னர் படுகாயம் அடைந்த சுற்றுலாப் பணிகள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
அந்த விபத்தில் 12 இந்திய சுற்றுலாப் பயணிகளும் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே சமயத்தில் துருக்கியில் உள்ள இல்ஹாரா பள்ளத்தாக்கில் மற்றும் ஒரு விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் உள்ளூரில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.