
பெங்களூரில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சுந்தரவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி சுமதி. இவர்கள் இருவரும் ராணிப்பேட்டையில் உள்ள தனது உறவினரை சந்தித்து விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்ப ஆட்டோவில் காட்பாடி ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது விஏஓ அலுவலகம் அருகே வேலூரை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியது.
இதில் சுந்தரவாசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மனைவி சுமதி மற்றும் ஆட்டோ ஓட்டுனர் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து இறந்த சுந்தரவாசனின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.