
பெங்களூர் மாவட்டத்தில் உள்ள பகுதியில் அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பீகாரைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளிகள் அங்கு தங்கி வேலை பார்த்து வருகின்றனர். ஹோலி பண்டிகையை முன்னிட்டு அவர்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள் மது விருந்து நடத்தினர். ஆதில் ராஜேஸ்ஷாம் (20), அன்சூ (19), தீபு (23) உள்ளிட்ட 11 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர்.
அப்போது திடீரென ஒருவர், ஷாம், அன்சூ, தீபு ஆகிய 3 பேரையும் இரும்பு கம்பி மற்றும் மது பாட்டிலால் சரமாரியாக தாக்கினார். இதில் அவர்கள் மூன்று பேரும் படுகாயமடைந்து சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவர்கள் 3 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொலையான நபர்களில் ஒருவர், கொலையை அரங்கேற்றிய நபரின் தங்கையுடன் பேசி வந்தது தெரிய வந்தது.
இதை அறிந்த அவர், தனது தங்கை உடன் பேசி வந்த நபரை தாக்கியுள்ளார். இதை தடுக்க மற்ற 2 பேரும் முயற்சி செய்துள்ளனர். இதனால் மூன்று பேரையும் அந்த நபர் இரும்பு கம்பியால் தாக்கி கொன்றது தெரிய வந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.