2023-ஆம் ஆண்டு அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தென்னிந்தியாவில் இருந்து நடிகைகள் கோடி கணக்கில் சம்பளம் வாங்குகின்றனர். மூன்று வருடங்களுக்கும் மேலாக நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.

இந்த ஆண்டும் நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் ஒரு படத்தில் நடிக்க 3 முதல் 5 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கினார். தற்போது பாலிவுட்டில் அறிமுகமானதால் நயன்தாரா தனது சம்பளத்தை 10 கோடி ரூபாயாக உயர்த்தி விட்டார்.

இதனையடுத்து நடிகை தமன்னா தமிழ் படங்களை விட பாலிவுட் படங்களில் அதிகம் கவனம் செலுத்துகிறார். அவர் ஒரு படத்தில் நடிக்க 5 முதல் 7 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார். குறிப்பாக ஜெயிலர் படத்தில் காவலா பாடலில் ஒரு சில காட்சிகளில் நடிக்க தமன்னா 7 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மூன்றாவதாக நடிகை சமந்தா நடித்த குஷி, யசோதா ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் பெரிய பட்ஜெட்டில் எடுத்த சகுந்தலம் படம் தோல்வியே தழுவியது. ஒரு படத்தில் நடிக்க சமந்தா 4 முதல் 6 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து தமிழ் சினிமாவில் ரீ- என்ட்ரி கொடுத்த நடிகை திரிஷா பொன்னியின் செல்வன் படம் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார். அதன்பிறகு விஜய்யுடன் லியோ படத்தில் நடித்தார். ஒரு படத்தில் நடிக்க த்ரிஷா 3 முதல் 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.