
முன்னதாக தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதோடு 14, 15 ஆம் தேதிகளில் நீலகிரி, கேரளா போன்ற மலைப்பகுதிகளில் அதிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதேபோன்று திருச்சி, இடுக்கி, பத்தனம்திட்டா, பாலக்காடு மாவட்டங்களுக்கும் கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் வழங்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம், கோட்டையம், எர்ணாகுளம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு மஞ்சளா அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.