கடந்த ஏப்ரல் 1ம் தேதி அன்று பஞ்சாபின்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் உத்தரப்பிரதேசம் மாநிலம் ஏகனா மைதானத்தில் மோதியது. இதில் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது பஞ்சாப் வீரர் பிரியன்ஷ் ஆர்யாவின் விக்கெட்டை வீழ்த்திய லக்னோ பவுலர் திக்வேஷ் ரதி நோட்புக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பிசிசிஐ அவருக்கு போட்டி கட்டணத்திலிருந்து 25% அபராதம் விதித்தது. அதோட அவருக்கு ஒரு டிமெரிட் புள்ளியும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் ஏப்ரல் 4-ம் தேதி மீண்டும் உத்திரபிரதேசத்தின் அதே மைதானத்தில் லக்னோ மும்பை அணிகள் மோதின. இதில் மும்பையை, லக்னோ அணி வீழ்த்தியது. இந்நிலையில் திக்வேஷ் ரதி மீண்டும் நோட்புக் செலிப்ரேஷனில் ஈடுபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மும்பை வீரர் நமன் தீர் 46 ரன்னில் இருந்த போது திக்வேஷ் பந்தில் ஆட்டம் இழந்தார். அதை கொண்டாடுகிறேன் என்ற பெயரில் திக்வேஷ் மீண்டும் நோன்புக்கு கையில் எடுத்துள்ளார்.

பிசிசிஐ கண்டித்தும் அவர் தன்னுடைய பழக்கத்தை மாற்றிக் கொள்ளவில்லை. இதை பார்த்த ரசிகர்கள் இவன் இன்னும் திருந்தல மாமா என்று சமூக வலைதளத்தில் திக்வேஷை கிண்டல் செய்து வருகின்றனர்.