சென்னை ராமாபுரம் சுடுகாடு அருகே இன்று அதிகாலை மழை நீர் வடிகால் பணியினை மேற்கொண்டு வந்த கணபதி என்பவர் மீது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீஸார் கணபதியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.