தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை காலை 10 மணிக்கு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் ஏராளமான தனியார் நிறுவனங்கள் பங்கேற்று விற்பனையாளர்கள், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், மேலாளர், கணினி ஆபரேட்டர்கள், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.

இந்நிலையில் பள்ளி, டிப்ளமோ, பட்டப்படிப்பு என அனைத்துவித கல்வித்தகுதி பெற்றவர்களும் இந்த முகாமில் பங்கேற்கலாம். மேலும் முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலை வாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. எனவே தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் முகாமில் கலந்துகொண்டு பயன் பெறலாம் என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி கூறியுள்ளார்.