தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மெகா ஸ்டோர் என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி தமிழக நுகர் பொருள் வாணிப கழகமும் கூட்டுறவுத்துறையும் இணைந்து வீட்டிற்கு தேவையான அனைத்து வகை பொருட்களையும் ஒரே இடத்தில் விற்பனை செய்யும் வகையில் புதிய முயற்சி எடுத்துள்ளது. இதற்காக அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் படியாக அனைத்து மாவட்டங்களிலும் மெகா ஸ்டோரினை திறக்க உள்ளது.

இதில் கூட்டுறவு சங்கங்களின் தயாரிப்புகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்கள், மலைவாழ் மக்கள் தயாரிக்கும் பொருட்கள், மருந்துகள் மற்றும் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் காய்கறிகள், பழங்கள் போன்றவைகள் விற்பனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த மெகா ஸ்டோர் திட்டம் அறிமுகமானால் பொதுமக்களுக்கு வேண்டிய அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் என்பதால் இந்த திட்டத்திற்கு நிச்சயம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.