இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலத்தில் விளையும் பூண்டு அதிக மருத்துவ குணம் நிறைந்ததாகும். இதில் மத்திய பிரதேசத்திலிருந்து தான் நாடு முழுவதும் பூண்டு சப்ளை ஆகின்றது. மேலும் தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்ட மலைப்பகுதியில் பூண்டு விளைந்தாலும் அது போதுமானதாக இல்லை. அசைவ உணவு சமையலில் பூண்டு முக்கிய பங்கு வகிக்கின்றது. மத்திய பிரதேசத்திலிருந்து மூட்டை மூட்டையாக லாரிகளில் கொண்டு வரப்படும் பூண்டு தலைநகர் சென்னைக்கு தினமும் சப்ளை செய்யப்படுகின்றது.

அதோடு தேனி மாவட்டம் வடுகப்பட்டியிலுள்ள சந்தைக்கு வாரம் தோறும் சப்ளை ஆகின்றது. அந்த வகையில் வட தமிழக தேவைக்காக சென்னைக்கு தினமும் 10 லாரிகளில் பூண்டு கொண்டு வரப்படுகின்றது. ஒவ்வொரு லாரிகளிலும் 16 டன் இடையிலான பூண்டு எடுத்து வரப்படுகின்றது. அதேபோல வடுகப்பட்டி வார சந்தைக்கு 50 லாரிகளில் பூண்டு கொண்டு செல்லப்படுகின்றது. இங்கு வரும் பூண்டு தமிழகத்தின் மாவட்டங்களுக்கும் கேரள மாநிலத்திற்கும் சப்ளை ஆகின்றது. இந்நிலையில் விளைச்சல் குறைவு, உக்கரைன் போர் பதற்றம் காரணமாக கடந்த சில மாதங்களாக பூண்டு விலை உச்சத்திலிருந்தது அதாவது 1 கிலோ ₹ 500 வரை சென்றதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

அதோடு சமையலிலும் பூண்டு பயன்பாட்டையும் குறைத்து கொண்டனர். கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக உச்சத்தில் இருந்த பூண்டு விலை தற்போது குறைந்துள்ளது. மேலும் மத்திய பிரதேசத்தில் பூண்டு விளைச்சல் அமோகமாக நடந்து வந்ததால் பொங்கல் பண்டிகைக்கு பிறகு விற்பனைக்கு வர தொடங்கி இருக்கின்றது. இதனால் விலையும் குறைந்து வருகின்றது. தற்போது 1 கிலோ பூண்டு சிறியது ₹ 110 க்கும் பெரியது ₹ 160 க்கும் விற்பனை ஆகின்றது. இதனால் இல்லத்தரசிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.