
தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு ரூ. 1 கோடி மதிப்பிலான 971 கிராம் உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தி செல்லப்பட்டது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் சந்தேகத்தின் பெயரில் பயணி ஒருவரின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது அவர் சூட்கேசில் மறைத்து வைத்திருந்த 2 பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டது. அதில் ரூ. 1 கோடி மதிப்பிலான கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து அவர் வைத்திருந்த கஞ்சா போடலங்களையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.