
உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான பயனர்களால் ஜிபே பயன்படுத்தப்படுகிறது.தற்போது ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் என்பது அதிகரித்துவிட்ட நிலையில் பலரும் அதனை பயன்படுத்துவதால் அதில் நாளுக்கு நாள் புது புது அப்டேட்டுகள் அறிமுகப்படுத்தப்படுகிறது. அந்த வகையில் மோசடியை தடுப்பதற்காக ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய விதிமுறை அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. அதன்படி,
ஏப்ரல் 1, 2025 முதல் செயலற்ற மொபைல் எண்களுக்கு இணைக்கப்பட்ட UPI ஐடிகள் நீக்கப்படும் – NPCI புதிய அறிவிப்பு
பயனாளர்களுக்கு எச்சரிக்கை: போன்பே, கூகுள் பே, பேடிஎம் உள்ளிட்ட UPI செயலிகளின் சேவைகள் பாதிக்கப்படலாம்
செயலற்ற மொபைல் எண்களை உடனே புதுப்பிக்க வேண்டும் – சைபர் மோசடிகளை தடுக்க நோக்கம்
யாரெல்லாம் பாதிக்கப்படலாம்?
புதிய எண்களுக்கு மாற்றிய பிறகு வங்கியில் பதிவு செய்யாதவர்கள்
பழைய சிம் கார்டுகளை விட்டுவிட்டு வங்கிப் பதிவு புதுப்பிக்காதவர்கள்
செயலற்ற அல்லது பிறருக்கு மாற்றப்பட்ட எண்களுடன் தொடர்ந்து UPI பயன்படுத்துபவர்கள்
எப்படி தடுப்பது?
வங்கியில் பதிவு செய்த மொபைல் எண் செயலிலிருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யவும்
ஏப்ரல் 1க்குள் உங்கள் வங்கி கணக்கில் புதிய எண்ணை புதுப்பிக்கவும்
பழைய எண்ணுடன் இணைக்கப்பட்ட கணக்குகள் உண்டா எனச் சரிபார்த்து, அவற்றை புதுப்பிக்கவும்
ஏன் இந்த மாற்றம்?
சைபர் மோசடிகள் மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களை தவிர்க்க NPCI இந்த முடிவை எடுத்துள்ளது. பழைய எண்கள் புதியவர்களுக்கு மாற்றப்படும் சூழலில் பாதுகாப்பு நெருக்கடி உருவாகலாம் என்பதே இதன் நோக்கம்.