வடக்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 29ம் தேதி உருவாகுவதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 30ம் தேதி தாழ்வுப்பகுதி உருவாகும் என கணிக்கப்பட்ட நிலையில், ஒருநாள் முன்னதாகவே உருவாகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் தீவிரமடையும். இதனால், தமிழகத்தில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.