அண்ணாமலையின் நெருங்கிய நண்பராக இருந்த சி.டி.ரவி, பாஜக தேசிய பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் சிடி ரவி சரியாக செயல்படாததால் இந்த நீக்கத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த அனில் ஆண்டனி, முன்னாள் ஏஎம்யு துணைத் தலைவர் தாரிக் மன்சூர் உள்ளிட்டோர் பாஜகவின் துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.